» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒருதலைக் காதல் விவகாரம்: பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:18:12 PM (IST)
கர்நாடக மாநிலம் பண்ட்வால் தாலுகா காக்யபாடா அருகே பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காக்யபாடா அருகே கொடங்கே பகுதியைச் சேர்ந்த பாலப்பா கவுடாவின் மகள் லாவண்யா (22). இவர் கல்லடுக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். லாவண்யாவின் தூரத்து உறவினரான சேத்தன் (25) என்பவர் லாவண்யாவைக் காதலிப்பதாகக் கூறித் தொடர் அச்சுறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். சேத்தனின் செயல்களை லாவண்யா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
பணிமுடிந்து வீட்டிற்குத் திரும்புவதற்காக லாவண்யா பேருந்து நிலையத்திற்கு வந்து, காக்யபாடா செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சேத்தன், பேருந்துக்குள் லாவண்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துள்ளார். இதனால் பேருந்திலிருந்து இறங்கி ஓடிய லாவண்யாவைப் பின்தொடர்ந்து சென்று, பேருந்து நிலைய வளாகத்திற்குள் அரிவாளால் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த லாவண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சேத்தன் ஆயுதத்தைப் பேருந்து நிலையத்திலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் லாவண்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பியோடிய சேத்தனைக் கைது செய்யத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)

நல்ல நகைச்சுவை: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்துப் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:57:52 PM (IST)

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:44:13 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்: நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:26:12 PM (IST)

செங்கோட்டையில் 80-வது சுதந்திர தின விழா: முதன்முறையாக ஒலிக்கிறது வந்தே மாதரம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:53:50 AM (IST)

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்: தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு; போர்க்களமான சட்டமன்ற வளாகம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:36:38 AM (IST)


