» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சபாநாயகர் மீதான அவதூறு வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகி ஆவணங்களை தாக்கல் உத்தரவு
வியாழன் 8, ஆகஸ்ட் 2024 12:40:15 PM (IST)
சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கில் போதிய ஆவணங்களை தாக்கல் செய்ய அ.தி.மு.க. நிர்வாகிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
அ.தி.மு.க.வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சபாநாயகர் அப்பாவு பேசியதாக கூறி அவர் மீது அ.தி.மு.க. வக்கீல் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜெயவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப ஏதுவாக போதிய ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
