» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாம்பரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் : திருச்சி, செங்கோட்டை வழியாக இயக்கம்
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 12:38:08 PM (IST)
தாம்பரம்-கொச்சுவேலி இடையே திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, கொல்லம் வழியாக வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தாம்பரத்தில் இருந்து வருகிற 6-ஆம் தேதி, 8-ஆம் தேதி, 13-ஆம் தேதி, 15-ஆம் தேதி, 20-ஆம் தேதி, 22-ஆம் தேதி ஆகிய நாட்களில் (வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06035) திருச்சிக்கு நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.
அதுபோல் மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வருகிற 7-ஆம் தேதி, 9-ஆம் தேதி, 14-ஆம் தேதி, 16-ஆம் தேதி, 21-ஆம் தேதி, 23-ஆம் தேதி ஆகிய நாட்களில் (சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை) மாலை 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06036) திருச்சிக்கு நள்ளிரவு 1.45 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.
திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, கொல்லம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 14 மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் வாரம் இருமுறை இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா SC, ST ஆணையத் தலைவர் தகவல்
திங்கள் 24, மார்ச் 2025 5:49:44 PM (IST)

நெல்லையில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 12:37:39 PM (IST)

தங்கை கணவரை தாக்கியதாக மைத்துனர் கைது
திங்கள் 24, மார்ச் 2025 8:46:54 AM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
