» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 11:12:17 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் புகழ்பெற்ற சிவாலயமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண திருவிழா நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலை கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை யொட்டி நேற்று சம்பா நதியில் ஒற்றை காலில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சென்று காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அதன் பிறகு அம்மன் கோவிலில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருநீறு பூசி வெண்பட்டு உடுத்தி ஒற்றை காலில் தபசு இருந்த காந்திமதி அம்பாள் மேளதாளம் முழங்க பக்தர்களுக்கு அருள் பாலித்த பிறகு மண்டபத்தில் எழுந்தருளி சுவாமி திருக்காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
நேற்று முதலே நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலையில் இன்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வருகை தந்தனர். நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
