» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்: அரசுக்கு முக்கிய கோரிக்கை!!!
வியாழன் 16, ஜனவரி 2025 5:55:55 PM (IST)

காணும் பொங்கலை முன்னிட்டு அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள், சாலை வசதி மற்றும் உடை மாற்றும் அறையை மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது அடுத்தடுத்து மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் என தமிழகத்தில் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர் குறிப்பாக இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது காணும் பொங்கல் என்றாலே தமிழகத்தில் பாரம்பரியமாக பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று நீராடி விட்டு பொழுதை போக்குவார்கள் அந்த வகையில்
காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மட்டும் இல்லாமல் விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் அகஸ்தியர் அருவியில் குவிந்தனர்.
இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இன்றும் அருவியில் மிதமான தண்ணீர் விழுந்தது. பாபநாசம் பகுதியில் இன்று மேகமூட்டத்துடன் லேசான மழை சாரல் விழுவதால் வானிலை இதமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் ரம்மியமான இயற்கை சூழலை ரசித்தபடி அருவியில் குறித்து விட்டு சென்றனர்.
மேலும் அருகில் உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே அங்கு சென்ற பொதுமக்களும் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க வந்தனர். இதனால் கூட்டம் அதிகளவு காணப்பட்டது முன்னதாக பாபநாசம் வனசோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது.
வன சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனையிட்டனர். இதற்கிடையில் அருவிக்கு செல்லும் சாலை மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்கவும், அருவிக்கு அருகில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)
