» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் அன்புமணியின் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு
திங்கள் 6, அக்டோபர் 2025 12:51:24 PM (IST)
நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி நாளை (அக்.7) நடத்தவிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
உரிமை மீட்க தலைமுறை காக்க 100 நாள் நடைபயணத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபயணம் மேற்கொள்ள இருந்தார்.
இதற்கிடையில், கரூரில் நடிகர் விஜய் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது அதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணி தொடங்கி உள்ளது.
இந்நிலையில், நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி நாளை (அக்.7) நடத்தவிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போலீசார் அறிவுறுத்தலை ஏற்று அன்புமணி தனது நடைபயணத்தை ரத்து செய்தார். மேலும் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மக்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)




