» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி: பாளையங்கோட்டையில் பரபரப்பு!
புதன் 12, நவம்பர் 2025 8:43:51 AM (IST)
பாளையங்கோட்டையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் ‘தர்மஅடி’ கொடுத்தனர். அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் மாலையில் வகுப்புகள் முடிந்தவுடன் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றனர். அப்ேபாது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தவறான கண்ணோட்டத்துடன் மாணவிகளை நோட்டமிட்டவாறு இருந்தார்.
இதனால் சில மாணவிகள் வேறு இடத்துக்கு நகர்ந்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் திடீரென்று 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மற்றும் சக மாணவிகள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்ைல கொடுத்த வாலிபரை மடக்கி பிடித்து ‘தர்ம அடி’ கொடுத்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பாளையங்கோட்டை மகாராஜநகர் ரகுமத் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ் (35) என்பது தெரியவந்தது. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவருடைய தந்தை கருப்பசாமி, ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார். அவர் இறந்து விட்டார். பாளையங்கோட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுவில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி ஆசிரியர் கொலை : பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
புதன் 12, நவம்பர் 2025 5:50:21 PM (IST)

நெல்லை வருகை தந்த ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
புதன் 12, நவம்பர் 2025 4:33:40 PM (IST)

இன்ஜினியரை கொன்ற மனைவி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 12, நவம்பர் 2025 8:24:35 AM (IST)

நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 10:46:04 AM (IST)

போலீஸ் தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் அதிரடி கைது: 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:41:21 AM (IST)

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 12:36:14 PM (IST)




