» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)
திருநெல்வேலி பாப்பாக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே 28.11.2025 அன்று கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த குமரேசன் (31) என்பவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று, பாப்பாக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேற்சொன்ன வாலிபரின் மரணத்திற்கான காரணத்தினை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டதன் பேரில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில், தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர புலன் விசாரணையில், இறந்து போன நபருடன் நெருங்கி பழகிய நபர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டதில், இறந்து போன நபருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் ராஜசேகர்(29) என்பவருக்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக, ராஜசேகர் என்பவர் குமரேசனை கொலை செய்த விபரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜசேகரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் எந்த ஒரு சிறு தடயங்களும் இல்லாத நிலையில், சிசிடிவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடனும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திறமையான விசாரணையின் மூலம் கொலை குற்றத்தில் ஈடுபட்ட கொலையாளி கண்டறியப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!
திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், ட்யூப் எரிக்க கூடாது: ஆட்சியர் சுகுமார் வேண்டுகோள்
சனி 10, ஜனவரி 2026 5:20:20 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு நியமன ஆணை: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
சனி 10, ஜனவரி 2026 4:31:25 PM (IST)

