» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரயிலின் ஏசி பெட்டியில் பெட்ஷீட், கம்பளி போர்வைகளை திருடிய பயணிகள் சிக்கினர்
திங்கள் 22, செப்டம்பர் 2025 12:10:46 PM (IST)
டெல்லியில், ரயிலின் ஏசி பெட்டியில் படுக்கை விரிப்புகள், கம்பளி போர்வைகளை திருடிய பயணிகள் சிக்கினர்.
டெல்லி- ஒடிசா புருசோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணம் செய்த பயணிகள் சிலர் படுக்கை விரிப்பு, கம்பளி ஆகியவற்றை தங்கள் பைகளில் எடுத்துச் சென்று சிக்கினர். தொலை தூர ரயிலில்களில் தூங்கும் வசதி கொண்ட ஏ.சி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், கம்பளி ஆகியவை வழங்கப்படும்.
இரவில் தூங்கும்போது அவற்றை பயன்படுத்திய பின், பயணிகள் அவற்றை தங்கள் இருக்கையில் வைத்து விட்டு செல்வது வழக்கம். புரியிலிருந்து டெல்லிக்கு செல்லும் புருசோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் ஒரு பெண்ணும், 2 ஆண்களும் பயணம் செய்தனர். அவர்கள் டெல்லியில் இறங்கும்போது அந்த படுக்கை விரிப்புகளையும், கம்பளியையும், மடித்து தாங்கள் கொண்டு வந்த பைகளில் வைத்துள்ளனர்.
இதைப் பார்த்த ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் உதவியாளர், அந்த பயணிகளிடம் படுக்கை விரிப்புகள் மற்றும் கம்பளியை இதுபோல் திருடுவது நியாயமா? என கேட்டுள்ளனர். அவற்றை திருப்பி கொடுங்கள் அல்லது ரூ.780 அபராதம் செலுத்துங்கள் என கூறியுள்ளனர். அப்போது அந்த பயணிகளில் ஒருவர், தனது தாய் தவறுதலாக படுக்கை விரிப்பை மடித்து பையில் வைத்துவிட்டார் என கூறி சமாளித்தார். அவர்களை டிடிஇ மற்றும் ரயில்வே உதவியாளர் ஆகியோர் எச்சரித்து அனுப்பினர்.இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 கோடி: மத்திய நிதி அமைச்சகம் தகவல்
திங்கள் 1, டிசம்பர் 2025 4:51:46 PM (IST)

தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 12:10:50 PM (IST)

நேஷனல் ஹெரால்டு பண மோசடி விவகாரம் : சோனியா, ராகுல் காந்தி மீது புதிய வழக்கு பதிவு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:47:46 AM (IST)

காசி-தமிழ் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி அழைப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:40:41 AM (IST)

மழை, வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
வெள்ளி 28, நவம்பர் 2025 5:05:40 PM (IST)

எஸ்ஐஆர் பணிச்சுமையால் 26 அதிகாரிகள் மரணம்: தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் பாய்ச்சல்
வெள்ளி 28, நவம்பர் 2025 4:15:36 PM (IST)




