» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருமண்டல தேர்தல் மோதல்: தி.மு.க. நிர்வாகி கைது
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:40:57 AM (IST)
துாத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ., திருமண்டல தேர்தல் விரோதம் காரணமாக, வாலிபரை வீடு புகுந்து தாக்கியதாக தி.மு.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., துணைச்செயலராக உள்ள ஜெயக்குமார் ரூபன் (53), துாத்துக்குடி,- நாசரேத் திருமண்டல நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். கடந்த 9ம் தேதி நடந்த மேல நட்டார்குளத்தில் உள்ள துாய யோவான் சர்ச் பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜெயக்குமார் ரூபன் உட்பட மூவர் ஒரு அணியாக போட்டியிட்டனர்.
ஜெயக்குமார் ரூபன் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், அவரது ஆதரவாளர் சகாயராஜ் தோல்வியடைந்தார். அதற்கு ஜான் ராஜபாண்டியன் தான் காரணம் எனக்கூறி, நவ., 12ம் தேதி அவரது வீட்டிற்குள் புகுந்து ஜெயக்குமார் ரூபன் தகராறு செய்து, ஜான் ராஜபாண்டியன் மகன் ஹில்டன் (19), என்பவரையும் தாக்கினாராம். இதில் காயமடைந்த ஹில்டன் புகாரில் செய்துங்கநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஜெயக்குமார் ரூபனை கைது செய்த போலீசார், மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜெயக்குமார் ரூபன் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)



மக்கள்Nov 18, 2025 - 10:36:15 AM | Posted IP 162.1*****