» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:04:17 PM (IST)
தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் மாரி தங்கம் (28), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று ஏரலில் வேலை செய்துவிட்டு பைக்கில் முத்தையாபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு முள்ளக்காடு அருகே வரும்போது சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை எந்திரம் மீது பைக் மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த மாரித்தங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முக குமாரி வழக்கு பதிவு செய்து கலவை எந்திரத்தை அனுமதி இல்லாமல் சாலை ஓரத்தில் நிறுத்தியதாக தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த தாமோதரன் மகன் சரவண பெருமாள் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)


