» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: தூத்துக்குடி தம்பதி கைது!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:24:26 AM (IST)
பூதப்பாண்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த தூத்துக்குடி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (37). பட்டதாரியான இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் சுப்பையார்புரம் 2-வது தெருவை சேர்ந்த செலின் சரத்ராஜ் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
அப்போது, செலின் சரத்ராஜூம் அவரது மனைவியும் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜகோபாலிடம் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் தம்பதி பணமோசடி செய்து ஏமாற்றியதை அறிந்த ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுபற்றி ராஜகோபால் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செலின் சரத்ராஜ், அவரது மனைவி மஞ்சு ஆகிேயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய தூத்துக்குடிக்கு போலீசார் சென்றனர். ஆனால், அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கணவன்-மனைவி இருவரும் ஊட்டியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஊட்டிக்கு சென்று செலின் சரத்ராஜ், மஞ்சு ஆகிய 2 பேரையும் கைது செய்து பூதப்பாண்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர், போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)

குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
திங்கள் 12, மே 2025 8:58:45 AM (IST)

தனியாா் மினி பஸ்களை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
ஞாயிறு 11, மே 2025 11:51:14 AM (IST)

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
ஞாயிறு 11, மே 2025 10:37:49 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)
