» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பணமோசடி வழக்கு : சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு
திங்கள் 4, டிசம்பர் 2023 4:52:09 PM (IST)
டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் வழக்கு நவ.24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதனை விசாரிக்கும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா அன்று ஆஜராகாததால் நீதிபதி பெலா எம்.திரிவேதி அமர்வு இந்த வழக்கை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. சத்யேந்தர் ஜெயின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிங்வி, இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்து, அதுவரை சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய் செய்தி வெளியிட்ட சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்!
வியாழன் 8, மே 2025 11:12:21 AM (IST)

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: உமர் அப்துல்லா பேட்டி
புதன் 7, மே 2025 3:41:28 PM (IST)

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியீடு
புதன் 7, மே 2025 12:54:12 PM (IST)

பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம்
புதன் 7, மே 2025 12:03:23 PM (IST)
