» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினம்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

செவ்வாய் 30, ஜனவரி 2024 11:42:33 AM (IST)

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: மகாத்மா காந்தியின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்ய எங்களை ஊக்குவிக்கின்றன என்றார். மற்றொரு பதிவில், பூஜ்ய பாபுவின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன், நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.

அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்திற்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன என பதிவிட்டுள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948-ம் ஆண்டு இதே நாளில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory