» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் : ராகுல்காந்தி உறுதி
திங்கள் 5, பிப்ரவரி 2024 8:23:50 AM (IST)
பழங்குடியின மக்களின் தண்ணீர், வனம், நிலம் ஆகியவற்றை காங்கிரஸ் பாதுகாக்கும் என்று ராகுல்காந்தி கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மாதம் 14-ந் தேதி மணிப்பூரில் பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார்.நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்டம் துன்டியில் யாத்திரை முடிவடைந்தது. இரவு ஓய்வுக்கு பிறகு, நேற்று தான்பாத் நகரின் கோவிந்த்பூரில் யாத்திரை தொடங்கியது. அங்கு சாலை பேரணியாக அவர் சென்றார்.
சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். சாலை பேரணியில் ராகுல்காந்தி பேசியதாவது: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் நான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம், இளைஞர்களுக்கும், பழங்குடியினருக்கும் நீதியை உறுதி செய்வதும் எங்கள் நோக்கம் ஆகும்.
பழங்குடி மக்களின் தண்ணீர், வனம், நிலம் ஆகியவற்றை காங்கிரஸ் பாதுகாக்கும். இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பாடுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வேலையின்மை ஆகியவை நாட்டின் இளைஞர்களது எதிர்காலத்தை சீரழித்து விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியன்Feb 5, 2024 - 09:31:11 AM | Posted IP 172.7*****