» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டி.ஆர்.பாலு பேசும் போது குறுக்கிட்டது ஏன்? மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
செவ்வாய் 6, பிப்ரவரி 2024 5:09:30 PM (IST)
மக்களவையில் தன்னை பார்த்து டி.ஆர்.பாலு பேசியது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத் தொடர் இதுவாகும். ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
கடந்த 1-ந் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் வழக்கம் போல் அலுவல்கள் நடைபெற்று வந்தன.
மக்களவையில் கேள்வி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரணம் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டி.ஆர். பாலுவின் பேச்சுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேசினார். இதற்கு டி.ஆர்.பாலு கடும் ஆட்சேபம் தெரிவித்து ஆவேசமாக பேசினார். டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மக்களவையில் தன்னை பார்த்து டி.ஆர்.பாலு பேசியது என்ன என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். எல்.முருகன் கூறியதாவது: மக்களவையில் வெள்ளபாதிப்பு குறித்து திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார். இதனால், அவையில் நான் குறுக்கிட்டேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, அன்ஃபிட் என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது சமூக நீதியில் தி.மு.கவிற்கு நம்பிக்கையில்லை. பட்டியலினத்தவர் எம்.பி, மந்திரி ஆவதை திமுக விரும்பவில்லை என்பதையே டி.ஆர்.பாலுவின் பேச்சு காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
JAI HINDFeb 7, 2024 - 03:38:02 PM | Posted IP 172.7*****
இவர்கள் சிறுபான்மை ஓட்டுக்காக இந்துக்களை அசிங்கப்படுத்துவார்கள், இந்து கோவிலை உடைத்தேன் என்பார்கள். மக்கள் இவர்களை புறக்கணிக்கும் காலம் வந்துவிட்டது.
உண்மFeb 9, 2024 - 12:39:36 PM | Posted IP 162.1*****