» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் என்று நேரு கூறினார் - பிரதமர் மோடி
புதன் 7, பிப்ரவரி 2024 3:37:17 PM (IST)
நேரு தனது ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப். 1-ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். இந்த நிலையில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து பிரதமா் மோடி மக்களவையில் நேற்று உரையாற்றினாா்.
தொடர்ந்து, இன்று மாநிலங்களவையில் உரையாற்றியுள்ளார். மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய நரேந்திர மோடி, பாஜக ஆட்சியில் ஆங்கிலேயர் கால சட்டங்களை நீக்குகிறோம் அல்லது மாற்றுகிறோம். ஆனால், ஆங்கிலேயர் கால சட்டங்களை காங்கிரஸ் அரசு இருந்தபோது ஏன் நீக்கவில்லை. ஆங்கிலேயர் கால மரபுகளை நீங்கள் ஏன் பின்பற்றினீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், 370வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகுதான், ஜம்மு காஷ்மீரில் பட்டியலினத்தவர் உரிமைகளைப் பெற்றனர். ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைக் கூட பாஜக அரசுதான் நிறைவேற்றியது என்று பிரதமர் பேசினார். முன்னாள் பிரதமர் நேரு, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடிதம் எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, நேரு தனது ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சந்திரன்Feb 7, 2024 - 04:35:19 PM | Posted IP 172.7*****