» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சம்: டெல்லியில் முதல்வர் பினராயி விஜயன் போராட்டம்

வியாழன் 8, பிப்ரவரி 2024 12:33:52 PM (IST)

கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார். 

மத்திய அரசை கண்டித்து கர்நாடகா முதல்-அமைச்சர் சித்தராமையா டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினார். இதில் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். 

பேரணியாக சென்று அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். கேரள மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானவர்கள் அவருடன் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி முதல் அமைச்சர்களான அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), பகவந்த்மான் (பஞ்சாப்) ஆகியோர் பங்கேற்றனர். கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக என பினராயி விஜயன் போராட்டத்தின்போது குற்றம்சாட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory