» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் விவசாயிகள் பேரணி: கடும் போக்குவரத்து நெரிசல்

செவ்வாய் 13, பிப்ரவரி 2024 11:46:36 AM (IST)



டெல்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டா் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனர்.

முக்கிய விவசாய சங்கள சங்கங்களான சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்), கிசான் மஸ்தூா் மோா்ச்சா (கேஎம்எம்) மற்றும் பல விவசாய சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவதற்காக ‘டெல்லி சலோ மாா்ச்’ அறிவித்துள்ளன.

பேரணியால் டெல்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியால் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory