» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அழைப்பவர் பெயரை செல்போனில் காட்டுங்கள்: நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை!

சனி 24, பிப்ரவரி 2024 4:54:36 PM (IST)

தொலைபேசி அழைப்பாளர்களின் பெயரை செல்போனில் காண்பிக்க வேண்டும் என அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு நெட்வொர்க் நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். புதிய நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரும்போது பெயர் வருவதில்லை, நம்பர் மட்டுமே வரும். இதனால் பலர் ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ட்ரூ காலர் செயலி இருந்தால் புதிய நம்பரில் இருந்து அழைப்புகள் வரும்போது அதில் பெயரும் சேர்ந்து காண்பிக்கும். இது செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பேருதவியாக இருப்பதால் பலரும் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தொலைபேசி அழைப்புகளின்போது அழைப்பாளர்களின் பெயரையும் காண்பிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.

டிராய் அமைப்பின் பரிந்துரையை ட்ரூ காலர் நிறுவனம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக ட்ரூ காலர் நிறுவனம் கூறுகையில், இந்தப் புதிய வசதியை அரசு அமல்படுத்தினால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory