» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

திங்கள் 26, பிப்ரவரி 2024 5:09:23 PM (IST)

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த அக். மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்துவ மிஷனரிகளின் துணையுடன்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்தார். இரு மதத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவலைப் பரப்புவதாகவும் இதனால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் அண்ணாமலை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு தர வேண்டும் என்றும் அண்ணாமலை சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். அதில் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, தமது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தர். இதனால் வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலை மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், அண்ணாமலையின் பேச்சு குறித்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் கீழமை நீதிமன்றம் பரீசிலிக்கும் என உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அண்ணாமலை தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தனர். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அண்ணாமலை மனு குறித்து பியூஸ் மனுஷ் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேச்சின் முழு விவரத்தின் மொழி பெயர்ப்பையும் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory