» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் குழந்தை கடத்தல் கும்பல் கைது: 2 பச்சிளம் குழந்தைகள் மீட்பு
சனி 6, ஏப்ரல் 2024 5:27:11 PM (IST)
டெல்லியில் குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து கைக்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தீவிர சோதனையை மேற்கொண்டு வந்த நிலையில், குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
புது டெல்லியின் கேசவபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த குழந்தை கடத்தல் கும்பலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, அழைத்து வரும் விடியோ ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பால் பாட்டில்களுடன், கைக் குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பது பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், குழந்தையைக் கடத்தி விற்க முயன்ற பெண்ணும், குழந்தையை வாங்க முயன்றவர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.