» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வாக்குத் திருட்டு போன்ற மோசமான சொற்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையம்
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:10:19 PM (IST)

எந்த ஆதாரமும் இல்லாமல் 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று ராகுல் காந்தி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில் கூறியுள்ளது.
பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் ஆணையம், வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பான தரவுகள், தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று கூறி பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். அதேபோல பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளை பெற தேர்தல் ஆணையமே உதவி வருவதாக ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
'வாக்குத் திருட்டு' என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் இதற்கு பதில் அளித்துள்ளது. 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்தி தவறான கதையை உருவாக்குவதற்குப் பதிலாக உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
"ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது 1951-1952 ஆம் ஆண்டு தேர்தல் முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. யாரேனும் எந்த தேர்தலிலாவது 2 முறை வாக்களித்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்துடன் பகிர வேண்டும். பதிலாக, எந்த ஆதாரமும் இல்லாமல் 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களை பயன்படுத்த வேண்டாம்.
இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தவறான கருத்துகளை உருவாக்குவது, கோடிக்கணக்கான வாக்காளர்களின் மீதான நேரடியான தாக்குதல் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதலும்கூட" என்று கூறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த்: பி.ஆர்.கவாய் பரிந்துரை!
திங்கள் 27, அக்டோபர் 2025 12:18:51 PM (IST)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: இந்தூர் வாலிபர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:49:58 PM (IST)

பிஹாரில் ஊடுருவல்காரர்களை எங்கள் அரசு வெளியேற்றும்: அமித் ஷா பிரச்சாரம்
சனி 25, அக்டோபர் 2025 5:38:13 PM (IST)

காவல்துறையினர் தொடர் பாலியல் வன்கொடுமை: கையில் எழுதி வைத்து மருத்துவர் தற்கொலை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:07:52 PM (IST)

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)

ஆந்திராவில் பஸ் தீவிபத்தில் 20பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:39:54 AM (IST)




