» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம்: 3 மத்திய அமைச்சர்களை களமிறக்கிய பாஜக!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:51:50 AM (IST)

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு பியூஷ் கோயல் உட்பட 3 மத்​திய அமைச்​சர்​களை பொறுப்​பாளர்​களாக பாஜக நியமித்​துள்​ளது.

தமி​ழ​கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்​பேரவை தேர்தல் வரவுள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடு பிடித்​துள்ளது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேநேரம் திமுக கூட்டணி பலமாக இருப்​ப​தால், தேர்தலில் திமுகவை தோற்கடிக்க, மெகா கூட்டணியை அமைக்க அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி தீவிர முயற்சி எடுத்து வருகி​றார்.

பாஜக, தமாகா மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்​துள்ள அதிமுக, மேலும் கட்சிகளை சேர்த்து கூட்டணியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பக்கபலமாக கட்சிகளை கூட்ட​ணியில் சேர்க்க, பாஜகவும் தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்​கிறது. குறிப்பாக, 2021 சட்டப்​பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்ட​ணியில் இருந்த கட்சிகளை​யும், திமுக கூட்ட​ணியில் உள்ள சில கட்சிகளையும் கூட்ட​ணியில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்​பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜக, தமிழக தேர்தல் பொறுப்​பாளர்களை பாஜக தலைமை நியமித்​துள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்​செய​லாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்​பில், "தமிழக சட்டப்​பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேசியத் தலைவர், தேர்தல் பொறுப்​பாளர் மற்றும் இணை பொறுப்​பாளர்களை நியமித்​துள்​ளார். அதன்படி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தமிழக சட்டப்​பேரவை தேர்தல் பொறுப்​பாளராக நியமிக்​கப்​படு​கி​றார்.

சட்டம் மற்றும் நீதித்துறை (தனிப்​பொறுப்பு) அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சிவில் விமான போக்கு​வரத்​துத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தேர்தல் இணை பொறுப்​பாளர்களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று தெரிவித்​துள்​ளார்.

ஏற்கெனவே, கடந்த மாதம் தமிழக சட்டப்​பேரவை தேர்தல் பொறுப்​பாளராக பாஜக தேசிய துணை தலைவர் வைஜயந்த் பாண்டா எம்பி நியமிக்​கப்பட்ட நிலையில், தற்போது மூன்று மத்திய அமைச்​சர்கள் கொண்ட குழுவை புதிய பொறுப்​பாளர்களாக பாஜக அமைத்​திருப்பது குறிப்​பிடத்​தக்கது. பழனிசாமியின் நண்பர் பியூஷ் கோயல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த 2019 மக்களவை தேர்தலின் போதும் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்​பாளராக நியமிக்​கப்​பட்​டிருந்​தார்.

தமிழக அரசியல் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் என்பதா​லும், அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி​யிடம் நெருங்கி பழகக்​கூடிய நண்பர் என்பதா​லும், பியூஷ் கோயல் மீண்டும் பொறுப்​பாளராக நியமிக்​கப்​பட்​டுள்ளதாக கூறப்​படு​கிறது. 

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்​படுத்த முடிவு செய்துள்ள இந்த குழுவினர், ஓ.பன்​னீர்​செல்வம், டிடிவி. தினகரன் உள்ளிட்​டோரையும் மற்றும் ராமதாஸ் - அன்புமணி இடையே நிலவி வரும் பிரச்சினையை சரிசெய்து, இருவரையும் ஒன்றாக இணைத்து ஒன்றுபட்ட பாமகவை கூட்ட​ணியில் சேர்க்க தேவையான நடவடிக்​கைகளை எடுக்க இருப்பதாக கூறப்​படு​கிறது.

அதேபோல், கடந்த முறை அதிமுக​விடம் 20 தொகுதிகளை பெற்ற பாஜக 4 தொகுதி​களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்​துள்ளது. தொகுதி பங்கீடு பேச்​சு​வார்த்தையில் அதி​முக​வுடன் இந்தக் குழு​வினர் ஈடுபடவுள்​ளனர்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory