» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராமர் கோயிலில் ரூ.7 கோடி கையாடல் வழக்கு : அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு!

திங்கள் 29, ஜூன் 2026 3:53:46 PM (IST)



அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வழக்கின் அவசரத் தன்மை குறித்து நீதிமன்றப் பதிவகம் மற்றும் உரிய அதிகாரி ஆகியோர் திருப்தி அடைந்த பிறகு, உரிய நேரத்தில் இந்த மனுக்கள் விசாரணைக்குப் பட்டியலிடப்படலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. 

மனுதாரர்களில் ஒருவரான அஜய் குமார் ராய் நேரில் ஆஜராகி, தற்போதைய விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி விரைவான விசாரணைக்கு வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சார்பில் மூத்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் சரண் தேவ் சிங் தாக்கூர் ஆஜரானார்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்குப் பக்தர்கள் அளித்த காணிக்கையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, குற்றத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை அண்மையில் ராஜிநாமா செய்தனர். இப்புகார் தொடர்பாகக் கோயிலில் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுத் தற்பொழுது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory