» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு!

செவ்வாய் 30, ஜூன் 2026 3:59:56 PM (IST)

இந்திய நாட்டின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாகப் பதவியில் இருந்த ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்றுடன் பணி ஓய்வு பெற்றார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற ஜெனரல் உபேந்திர திவேதியின் பணிக்காலம் இன்றுடன் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து, புதுடெல்லியில் அவருக்கு ராணுவ முறைப்படியான பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் அவருக்கு வழங்கப்பட்ட ராணுவத்தினரின் கௌரவ அணிவகுப்பு மரியாதையைப் புதிய தளபதியாகப் பொறுப்பேற்க உள்ள தீரஜ் சேத் ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவில், நாட்டின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டார். கடந்த 1986-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்த தீரஜ் சேத், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்புப் படை மற்றும் பாலைவனப் பகுதிகளில் கவசப் படைப்பிரிவு உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றிய நீண்ட கள அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory