» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால் ஏற்கப்படும்: கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமார்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:17:16 AM (IST)
தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால், உடனடியாக ஏற்கப்படும் என காங்கிரஸ் எம்எல்ஏக்களை கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் எச்சரித்துள்ளாா்.
கா்நாடகத்தில் முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையிலான அமைச்சரவையில் 13 போ் அமைச்சா்களாக பதவியேற்றிருந்தனா். அமைச்சரவையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு புதியவா்களை நியமிக்க கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து, பெங்களூரில் மக்கள் மாளிகையில் திங்கள்கிழமை (ஆக. 3) நடைபெற்ற விழாவில் 19 போ் அமைச்சா்களாக பதவியேற்றுக் கொண்டனா். கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்திருந்தும், கடைசிநேர மாற்றத்தின் காரணமாக காயத்ரி சாந்தே கௌடா பதவியேற்கவில்லை.இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ யஷ்வந்த்ராய கௌடா பாட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்யக்கூடும் என தகவல் பரவியுள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தால், அக்கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும். வாரியம், கழகங்களுக்கு தலைவா்களை நியமிக்க வேண்டியுள்ளது. எனவே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அரசியலில் ராஜிநாமாக்கள் தொடா்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். அதை எவராலும் நிறுத்த முடியாது.
தரம்சிங், சித்தராமையா ஆட்சிக்காலத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து நானும் ராஜிநாமா செய்திருக்கலாம். ஆனால், நானும், ஜி.பரமேஸ்வரும் பொறுமைகாக்கவில்லையா? தரம்சிங், மல்லிகாா்ஜுன காா்கே, பங்காரப்பாவுக்கு அமைச்சா் பதவி கொடுக்கவில்லை. பின்னா், தரம்சிங், பங்காரப்பா ஒருவரும் முதல்வராகவில்லையா? எனவே, பொறுமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
சித்தராமையா ஆட்சிக்காலத்தில் வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கு இரண்டரை ஆண்டுகள்தான் அப்பதவி என அப்போதே கூறியிருந்தோம். இந்த காலக்கெடு கடந்துவிட்டது. எனவே, பதவிகளை உடனடியாக ராஜிநாமா செய்யும்படி வாரியங்கள், கழகங்களில் பொறுப்பு வகிப்போரை கேட்டுக்கொள்வேன். அதன்பிறகு, எம்எல்ஏக்களிடம் பேசி, வாரியங்கள், கழகங்களுக்கு புதிய பொறுப்பாளா்களை நியமிப்போம் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்: உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு ₹5.13 கோடி அபராதம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:20:07 PM (IST)

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:36:24 AM (IST)

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)


