» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:37:47 PM (IST)

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில பாஜகவைச் சேர்ந்த விக்னேஷ் ஷிஷிர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மற்றும் அமலாக்கத் துறை (ED) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுகள்:
மனுதாரரான கர்நாடகாவின் விக்னேஷ் ஷிஷிர், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய தரப்பினருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த முதல்கட்ட விசாரணை நடைபெறும் வரை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து விசாரணைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை எந்தவொரு அறிக்கையையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ராகுல் காந்திக்கு முக்கிய நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குவங்கத்தில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 6 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:14:51 PM (IST)

ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:53:03 AM (IST)

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)


