» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியப் பெண்ணுக்கு ஐ.நா.,வில் முக்கியப்பதவி

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 4:30:12 PM (IST)

இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார். 

இதற்கான உத்தரவை ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பிறப்பித்து உள்ளார். இந்த பொறுப்பை நேற்று( ஏப்.,22) அவர் ஏற்றுக் கொண்டார். ஐ.நா.,வில் பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் சமூக கொள்கை ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார்.

இந்தோனேஷியாவில் ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக கீதா சபர்வால் நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கு முன்னர், கீதா சபர்வால் தாய்லாந்தில் ஐ.நா., ஒருங்கிணைப்பாளர் ஆகவும், இலங்கையில் அமைதி ஏற்படுத்துதல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா.,வின் ஆலோசகர் ஆகவும் பணியாற்றி உள்ளார். பிரிட்டனின் வேல்ஸ் பல்கலையில் வளர்ச்சி மேலாண்மை பாடத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory