» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மனைவியை அடித்துக் கொன்ற முன்னாள் அமைச்சர்: கஜகஸ்தானில் பயங்கரம்!

சனி 4, மே 2024 4:13:11 PM (IST)



கஜகஸ்தானில் முன்னாள் அமைச்சர், தனது மனைவியை உணவகத்தில் 8 மணி நேரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார அமைச்சராக இருந்தவர் குவாண்டிக் பிஷிம்பாயேவ்(44). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அல்மாட்டியில் உள்ள உணவகத்தில் இவரது மனைவி சுல்தானட் நுகெனனோவா(31) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஒருவாரமாக , தனக்கு இந்த மரணம் குறித்து எதுவும் தெரியாது என்று முன்னாள் அமைச்சர் பிஷிம்பாயேவ் போலீஸாரிடம் கூறினார்.

அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் போலீஸாருக்கு ஒத்துழைக்காததால், அவருக்கு எதிராக ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், தனது மனைவியை அடித்துக் கொலை செய்ததை குவாண்டிக் பிஷிம்பாயேவ் பின்பு ஒத்துக் கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், சுல்தானட் மரணத்திற்கு மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என்று கூறப்பட்டது. அத்துடன் தாக்குதலின் விளைவாக, அவரது நாசி எலும்புகளில் ஒன்று உடைந்தது மற்றும் அவரது முகம், தலை, கைகள் மற்றும் கைகளில் பல காயங்கள் இருந்ததும் கண்டுடிபிடிக்கப்பட்டது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, சுல்தானத் நுகெனோவா தலையில் ஏற்பட்ட பலத்த அடி காரணமாக உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. தனது சகோதரி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை என்று சுல்தானத் சகோதரி, கஜகஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது பிஷிம்பாயேவ் தனது மனைவி சுல்தானட்டை தாக்கி இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

அந்த வீடியோவில், பிஷிம்பாயேவ் தனது மனைவியை உணவகத்தில் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றதும் பதிவாகியுள்ளது. பிஷிம்பாயேவ் மற்றும் சுல்தானட் நாள் முழுவதையும் ஓட்டலில் கழித்ததாகவும் அதற்கு முந்தைய இரவு உணவகத்தில் மயக்கமடைந்த நிலையில் சுல்தானட் காணப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும் முதல் சோதனை வழக்கு இதுவாகும் என்று மிரர் ஆன்லைன் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் குவாண்டிக் பிஷிம்பாயேவ், ஒரு ஜோசியரை அழைத்ததாகவும், அவர் தனது மனைவிக்கு எதுவும் நடந்திருக்காது என்று உறுதியளித்ததாகவும் அல் ஜசீரா கூறியுள்ளது. சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸ் வந்தது என்றும், ஆனால், சுல்தானட் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory