» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போர் நிறுத்தத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்: பாகிஸ்தான் அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 9:13:08 AM (IST)
‘போர் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பிறகு நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த ஒரு உடன்பாட்டை எட்டின. ஆனால் சில மணி நேரத்திலேயே இந்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான், இந்தியாவின் கடும் கண்டனத்தை பெற்றது. உறுதியான நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.
இந்த நிலையில், போர் நிறுத்த நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. அது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ’பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானின் படையினர் பொறுப்புடனும், நிதானத்துடனும் நிலைமையைக் கையாள்கின்றனர்’ என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)

மனைவி விவாகரத்தால் விரக்தி : ஓடும் ரயிலுக்குள் தீவைத்த 67 வயது நபர் கைது!
சனி 28, ஜூன் 2025 12:23:38 PM (IST)

பிரான்ஸ் நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை: நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 5:13:47 PM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் டிரம்ப் தகவல்!
வெள்ளி 27, ஜூன் 2025 5:05:09 PM (IST)
