» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளங்களிலும் பரபரப்பாக இயங்குகிறார். எனவே லட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்கின்றனர்.
மேலும் தன்னை பின்தொடர்பவர்களுடன் நேரலையில் அவர் உரையாடும்போது வேடிக்கையான கருத்துகளை தெரிவிப்பார். இந்த கருத்துகள் சமூகவலைதளங்களில் வைரலாவதும் உண்டு. இந்தநிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்க் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தனது தனிப்பட்ட குடும்ப விவரங்களை பகிர்ந்த அவர் தனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், தனது மகன்களில் ஒருவருக்கு சேகர் என பெயர் சூட்டியிருப்பதாகவும் கூறியிருந்தார். இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை தாங்கள் சூட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஏப். 27-ல் கையெழுத்தாகிறது
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:14:18 PM (IST)

இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை: பிரான்ஸ் அரசு அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:17:03 AM (IST)

ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
புதன் 22, ஏப்ரல் 2026 10:54:33 AM (IST)

ஜப்பானில் 70 ஆண்டுகால ஆயுத ஏற்றுமதி தடை நீக்கம்: ஆஸ்திரேலியாவுடன் ₹60,000 கோடி ஒப்பந்தம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:28:15 AM (IST)

இந்தியா - இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள்: துணை ஜனாதிபதி முன்னிலையில் கையெழுத்து!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 9:08:06 AM (IST)

லெபனானில் இயேசு சிலையைச் சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்: அமைச்சர் கடும் கண்டனம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:55:13 PM (IST)

