» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளங்களிலும் பரபரப்பாக இயங்குகிறார். எனவே லட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்கின்றனர்.
மேலும் தன்னை பின்தொடர்பவர்களுடன் நேரலையில் அவர் உரையாடும்போது வேடிக்கையான கருத்துகளை தெரிவிப்பார். இந்த கருத்துகள் சமூகவலைதளங்களில் வைரலாவதும் உண்டு. இந்தநிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்க் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தனது தனிப்பட்ட குடும்ப விவரங்களை பகிர்ந்த அவர் தனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், தனது மகன்களில் ஒருவருக்கு சேகர் என பெயர் சூட்டியிருப்பதாகவும் கூறியிருந்தார். இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை தாங்கள் சூட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
திங்கள் 9, மார்ச் 2026 11:38:21 AM (IST)

ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஞாயிறு 8, மார்ச் 2026 8:56:43 PM (IST)

வளைகுடா நாடுகளைத் தாக்க மாட்டோம்: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உறுதி
சனி 7, மார்ச் 2026 5:53:56 PM (IST)

அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி கேட்க வேண்டும்! - ஈரானின் அதிரடி கோரிக்கை!
சனி 7, மார்ச் 2026 11:47:53 AM (IST)

ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்கள் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி!
வெள்ளி 6, மார்ச் 2026 12:17:23 PM (IST)

ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்திய துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:08:13 AM (IST)

