» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் மனைவி, 3 உறவினர்கள் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளி நபர் கைது
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:58:50 PM (IST)
அமெரிக்காவில் குடும்ப தகராறில் மனைவி, மற்றும் 3 உறவினர்களை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி நபரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் மனைவி மீமூ டோக்ரா (43), 12 வயது மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மூவரும் அதே மாகாணத்தில் லாரன்ஸ்வில் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர்.ஆனால், உறவினர் வீட்டிலும், மீமு டோக்ரா, விஜய்குமார் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய் குமார், அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மனைவி மீமூ டோக்ரா, அவரது உறவினர்களான கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரை தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
அப்போது வீட்டில் இருந்த விஜய்குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகளும் அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர். அவர்களில் 12 வயது சிறுவன் 911 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் விரைந்து சென்று விஜய்குமாரை கைது செய்தனர். 3 குழந்தைகளையும் மீட்டனர். 4 சடலங்களை மீட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அட்லாண்டா போலீசார் விஜய்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலைத் திசைதிருப்ப டிரம்ப் முயற்சி: ஈரான் பகிரங்கக் குற்றச்சாட்டு!
சனி 13, ஜூன் 2026 12:02:06 PM (IST)

இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு எந்தவிதத் தடையும் இல்லை: நேபாள அரசு விளக்கம்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:52:52 AM (IST)

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் ராணுவம்: மீறும் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு..!
வியாழன் 11, ஜூன் 2026 5:27:20 PM (IST)

ஹெலிகாப்டர் விபத்தால் வெடித்த மோதல்: ஈரான் மீது 2-ஆவது நாளாக அமெரிக்கா தாக்குதல்!
வியாழன் 11, ஜூன் 2026 12:31:12 PM (IST)

இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து மழை!
புதன் 10, ஜூன் 2026 5:26:56 PM (IST)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் சரமாரி துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி, 200பேர் படுகாயம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:22:20 PM (IST)


