» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவை இனி நம்ப முடியாது! - ஐரோப்பா தனி ராணுவம் அமைக்க ஜெலன்ஸ்கி அழைப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:32:39 PM (IST)

நேட்டோ கூட்டமைப்பில் அமெரிக்காவின் பிடி தளர்ந்து வரும் சூழலில், ஐரோப்பிய நாடுகள் தங்களது பாதுகாப்பிற்காகத் தனி ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகிறார். இதனால், நேட்டோ கூட்டமைப்பிலிருந்து அமெரிக்கா எந்த நேரத்திலும் வெளியேறக்கூடும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில்தான் ஜெலன்ஸ்கி இக்கருத்தை முன்வைத்துள்ளார்.
ஜெலன்ஸ்கி கூறிய முக்கியத் தகவல்கள்: ஐரோப்பாவைப் பாதுகாக்க அமெரிக்கா எப்போதும் வரும் என்று இனி நம்பியிருக்க முடியாது. அமெரிக்காவின் நிலைப்பாடுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறிய பிறகு, லிதுவேனியா அல்லது போலந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு யார் பதிலடி கொடுப்பார்கள்?" என்று ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐரோப்பா வெறும் அமெரிக்காவைப் பின்தொடரும் சக்தியாக மட்டும் இருக்காமல், தனக்கென ஒரு வலிமையான பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அமெரிக்கா நேட்டோவை விட்டு விலகுவது என்பது, ரஷ்ய அதிபர் புதினுக்குக் கொடுக்கப்படும் மிகப்பெரிய பரிசாக அமையும்.
உக்ரைன் - ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்தப் பேச்சு ஐரோப்பிய நாடுகளில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கா இல்லாத நேட்டோவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தனி ராணுவத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 11, ஜூலை 2026 12:21:14 PM (IST)

நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி: 40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:54:38 PM (IST)

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா!
வியாழன் 9, ஜூலை 2026 4:44:33 PM (IST)

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் - இந்தியா கவலை!
வியாழன் 9, ஜூலை 2026 10:33:33 AM (IST)

ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது: நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:59:06 PM (IST)


