» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் 34 சப்‍ இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: எஸ்.பி., சிலம்பரசன் உத்தரவு

வியாழன் 25, ஜனவரி 2024 8:44:56 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் 34 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 34 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை திசையன்விளைக்கும், தேவர்குளம் செல்வராஜ் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவிற்கும், மானூர் காளியப்பன் சீவலப்பேரிக்கும், 

பாப்பாக்குடி மேதாஜி சிதம்பரம் அம்பைக்கும், மாவட்ட குற்றப்பிரிவு ராஜேஸ்வரி களக்காடுக்கும், நெல்லை தாலுகா சாவித்ரி சீதபற்பநல்லூருக்கும், ராதாபுரம் ஜான்சன் களக்காடுக்கும், வள்ளிநாயகம் முன்னீர்பள்ளத்திற்கும், கூடங்குளம் வினுகுமார் முன்னீர்பள்ளத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு பால் தேவர்குளத்திற்கும் மாற்றப்பட்டனர்.

களக்காடு முருகன் மானூருக்கும், வள்ளியூர் பார்த்திபன் நாங்குநேரிக்கும், சுத்தமல்லி ஆறுமுகபெருமாள் திசையன்விளைக்கும், வி.கே.புரம் அந்தோணி சவரிமுத்து முக்கூடலுக்கும், திசையன்விளை உதயலட்சுமி விஜயநாராயணத்துக்கும், களக்காடு ரெங்கசாமி திசையன்விளைக்கும், நாங்குநேரி கணபதி கூடங்குளத்துக்கும், 

மணிமுத்தாறு பாலசுப்பிரமணியன் பாப்பாக்குடிக்கும், களக்காடு ராமநாதன் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவிற்கும், திசையன்விளை ப்ரியாராஜ்குமார் வள்ளியூருக்கும், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு சாந்தி சுத்தமல்லிக்கும், விஜயநாராயணம் கண்ணன் மணிமுத்தாறுக்கும், மாவட்ட குற்றப்பிரிவு கார்த்திகேயன் வள்ளியூருக்கும், தாழையூத்து மயிலப்பன் மூலைக்கரைப்பட்டிக்கும் மாற்றப்பட்டனர்.

முன்னீர்பள்ளம் கயல்விழி பத்தமடைக்கும், மூலைக்கரைப்பட்டி ஆறுமுகம் வி.கே.புரத்திற்கும், தேவர்குளம் ராஜேஷ் ராதாபுரத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு தனலட்சுமி தாழையூத்துக்கும், சீதபற்பநல்லூர் நஸ்ரீம் நெல்லை தாலுகாவிற்கும், பத்தமடை கண்ணன் ராதாபுரத்திற்கும், சீவலப்பேரி சுடலைக்கண்ணு மானூருக்கும், 

அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையம் அன்னஜோதி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், மானூர் கணேஷ்குமார் நயினார் சேரன்மாதேவிக்கும், சேரன்மாதேவி கணேசன் மானூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory