» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நியூஸ் 7 செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

வியாழன் 25, ஜனவரி 2024 4:43:55 PM (IST)



நியூஸ் 7 செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம் நியூஸ் 7 நிருபர் நேசபிரபு தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தென்காசி பிரஸ் கிளப் அருகில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை வகித்தார்.

மாநில துணை தலைவர் தூத்துக்குடி ஜெ.நிக்சன், தென் சென்னை மாவட்ட தலைவர் ஏ.லட்சுமணன், வட சென்னை நிர்வாகி ஐ.கேசவன், தென்காசி மாவட்ட நிர்வாகிகள் முத்துச்சாமி, ராஜேந்திரன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், செய்தியாளரை தாக்கிய கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும், பத்திரிக்கையாளர் பணி பாதுகாப்பு சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும், செய்தியாளரை தாக்கியவர்களுக்கு துணை போகும் காவல்துறையினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், செய்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory