» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடியரசு தினவிழா: தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய காந்திமதி யானை!

வெள்ளி 26, ஜனவரி 2024 10:01:13 AM (IST)

திருநெல்வேலியில் குடியரசு நாள் விழாவையொட்டி, நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி துதிக்கையை உயர்த்தி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.

குடியரசு நாள் விழா நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நுழைவாயில் பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

கோயில் செயல்அலுவலர் அய்யர் சிவமணி, இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர். அப்போது கோயில் யானை காந்திமதி தனது துதிக்கையை உயர்த்தி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory