» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 11:17:57 AM (IST)

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு மாதங்களும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவிலும் அதிகாலை 3 மணி அளவிலும் திடீரென கோடை மழை பெய்தது. 

இத்தகைய கோடை மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது காணப்பட்டு வருகிறது. குற்றாலம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் எதிர்பாராமல் வந்த நீரை கண்டு ஆனந்தமாக நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory