» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் ஜான் பாண்டியனை ஆதரித்து பா.ஜ.க., தேசிய தலைவர் பி.ஜி.நட்டா ரோடுஷோ!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 5:34:12 PM (IST)

தென்காசியில் ஜான் பாண்டியனை ஆதரித்து அகில இந்திய பா.ஜ.க., தேசிய தலைவர் பி.ஜி.நட்டா ரோடு "ஷோ” நடத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.,கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அகில இந்திய பா.ஜ.க.,தலைவர் பி.ஜி.நட்டா தென்காசியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தென்காசி வாய்க்கால் பாலம் முதல் பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ நடத்தி பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார்.
திறந்த வேன் மீது பி.ஜி.நட்டா நின்று ரோடு "ஷோ” நடத்தினார். அவருடன் வேட்பாளர் ஜான் பாண்டியன், பா.ஜ.க.,மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா உடனிருந்தனர்.சாலையின் இருபுறமும் கூடியிருந்த பா.ஜ.க.,கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து ஜான் பாண்டியனை வெற்றி பெறச் செய்யும்படி பி.ஜி.நட்டா கேட்டுக் கொண்டார். மேலும் அவர் தனது பரப்புரையில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வாக்கு சேகரித்த வந்துள்ளேன்.
நமது பாரதம் வளர்ச்சியடைந்த பாரதமாக வேண்டும். இதற்காக தென்காசியில் ஜான்பாண்டியனை வெற்றி பெறச் செய்யுங்கள். அவர் பாராளுமன்றம் சென்று தென்காசி தொகுதியின் தேவைகளை நிறைவேற்ற குரல் கொடுப்பார். காசி தமிழ் சங்கத்தை பிரதமர் மோடி அமைத்தார். திருவள்ளுவர் பெயரில் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டு தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என பி.ஜி. நட்டா பேசினார்.
பிரச்சார நிகழ்ச்சியில் பா.ஜ.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தென்காசி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!
திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)

நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா: SC, ST ஆணையத் தலைவர் தகவல்
திங்கள் 24, மார்ச் 2025 5:49:44 PM (IST)

நெல்லையில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 12:37:39 PM (IST)
