» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியர் பாமா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்றத் தலைவி இ. பார்வதி, துணைத் தலைவர் க. இசக்கிபாண்டியன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜார்ஜ் ராபர்ட் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பாத்திமா ஷிரின், நிர்வாகிகள், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மு. பீர்முகம்மது, ஒருங்கிணைப்பாளர் மீனாள் நடராஜன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சரவணன், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) சத்யஸ்ரிஜா, ஆசிரியர்கள் மாரியம்மாள், இந்திரா, பியூலா உஷாராணி, செல்வ ஜெயராணி, பிளாரன்ஸ் ஜெயராணி, மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!
திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், ட்யூப் எரிக்க கூடாது: ஆட்சியர் சுகுமார் வேண்டுகோள்
சனி 10, ஜனவரி 2026 5:20:20 PM (IST)

