» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உரிய நேரத்தில் சிறந்த கூட்டணியை அறிவிப்போம் : தென்காசியில் பிரேமலதா பேட்டி
வெள்ளி 30, ஜனவரி 2026 8:28:10 AM (IST)
அனைத்தும் தோழமைக் கட்சிகள் தான், உரிய நேரத்தில் சிறந்த கூட்டணியை அறிவிப்போம் என தென்காசியில் பிரேமலதா கூறினார்.
‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்கின்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலை தனது மகனும், இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரனுடன் குற்றாலநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துவிட்டது. சென்னையில் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.
தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: அனைத்தும் தோழமைக் கட்சிகள் தான். உரிய நேரத்தில் எங்கள் கட்சிக்கும், எதிர்காலத்திற்கும் சிறந்த கூட்டணியை அறிவிப்போம். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தே.மு.தி.க. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடாது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சரியான நேரத்தில், சரியான கூட்டணி அமைத்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் நெல்லைக்கு வருகிறார்கள். அவர்கள் நெல்லை தச்சநல்லூர் மதுரை ரோட்டில் உள்ள அமோகா பேலசில் காலை 11 மணிக்கு நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட தே.மு.தி.க செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

