» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிளஸ்-2 தேர்வுக்கு மினி ஜெராக்ஸ் பிட்: ஜெராக்ஸ் கடைகளுக்கு கல்வி அதிகாரி கடும் எச்சரிக்கை!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:00:20 AM (IST)
நெல்லையில் பிளஸ்-2 பொதுத்தேர்வின் போது விடைகளை ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்து வந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெராக்ஸ் கடைகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தமிழ் பாடத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 73 தேர்வு மையங்களில் 19,835 மாணவ-மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தலைமையில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.தேர்வு தொடங்குவதற்கு முன்பாக ஒருசில பள்ளிகளில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். அப்போது தேர்வு அறைக்குள் நுழையவிருந்த மாணவர்களைச் சோதனை செய்தபோது, ஒருசிலர் ‘பிட்’ அடிக்கும் நோக்கத்தில் புத்தகங்கள் மற்றும் கைடுகளில் உள்ள விடைகளைச் சிறிய அளவிலான ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கையும்களவுமாகப் பிடித்தனர். அந்த ஜெராக்ஸ்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மாணவர்களை எச்சரித்துத் தேர்வு எழுத அனுமதித்தனர்.
ஜெராக்ஸ் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவு:
மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட சில கடைகளில் இந்த மினி ஜெராக்ஸ்கள் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளுக்குச் சென்று எச்சரிக்கை விடுத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் கூறியதாவது:
"நெல்லை மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு ஜெராக்ஸ் கடையிலும் மாணவர்கள் 'பிட்' அடிப்பதற்காக மினி ஜெராக்ஸ் போட்டுக் கொடுக்கக் கூடாது. இதை மீறி செயல்படும் கடைகள் உடனடியாக மூடி ‘சீல்’ வைக்கப்படுவதோடு, உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இத்தகைய கடைகளை போலீஸார் ரகசியமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது".
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

