» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது: பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்!

புதன் 29, ஏப்ரல் 2026 8:34:26 AM (IST)

தூத்துக்குடி அருகே அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளிக் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் ஒன்றரை யூனிட் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

தூத்துக்குடி மாவட்டம், வர்த்தகரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்துவதாகக் கிராம நிர்வாக அலுவலர் (மாரிசங்கருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் எவ்வித அனுமதியுமின்றி மண் அள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், தட்டப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பொக்லைன் இயந்திர ஆப்பரேட்டர் ராமசாமி (33), லாரி ஓட்டுநர் வெள்ளைச்சாமி (45) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு பொக்லைன் இயந்திரம், ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒன்றரை யூனிட் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 


மக்கள் கருத்து

ஊர் மக்கள்Apr 29, 2026 - 11:12:26 AM | Posted IP 162.1*****

பொக்லைன் இயந்திரத்தை கொளுத்தி போடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory