» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)
திருச்சூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவினசேரி பகுதியைச் சேர்ந்த உன்னி மாயா (30), அனக்கல் பகுதியைச் சேர்ந்த சிவபிரசாத் (35) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவபிரசாத் உள்ளூர் சந்தையிலும், உன்னி மாயா திருச்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.
உன்னி மாயாவின் நடத்தையில் சிவபிரசாத் அடிக்கடி சந்தேகப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தம்பதியினரிடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நேற்று காலை உன்னி மாயா வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிவபிரசாத் உன்னி மாயாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், இச்சம்பவம் குறித்துத் தனது தாயாரிடம் சிவபிரசாத் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் அளித்தார்.
உடனடியாக வீட்டிற்கு விரைந்த பொதுமக்கள், மயங்கிய நிலையில் இருந்த உன்னி மாயாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சிவபிரசாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)

அரசுக்கு ரூ.1.92 கோடி வருவாய் இழப்பு: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
சனி 20, ஜூன் 2026 11:31:55 AM (IST)

நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 9 பேர் மீது வழக்குப்பதிவு!
சனி 20, ஜூன் 2026 11:03:42 AM (IST)


