» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)
பாளையங்கோட்டை மத்திய சிறையில் காலியாக உள்ள சமூக இயல் வல்லுநர் பணியிடத்திற்குத் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சிறை கண்காணிப்பாளர் கோ.பா.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இப்பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.15,000/- தொகுப்பூதியம் (Honorarium Pay) வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதியாகக் கீழ்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று பெற்றிருக்க வேண்டும்:
சமூகப் பணி (Social Work), சமூக சேவை (Social Service), சமூக அறிவியல் (Social Science), குற்றவியல் (Criminology), சமூகவியல் (Sociology), வயதுவந்தோர் கல்விக்கான கற்பித்தல் (Andragogy / Adult Education) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் (PG Degree).
(அல்லது)
சமூகப் பணி, சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளகலைப் பட்டம் (UG Degree). (அல்லது) ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்று, அதனுடன் சமூகப் பணி, சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியல் ஆகியவற்றில் டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகளைக் கொண்ட நபர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கோ.பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)


