» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா துவக்கம்: 12-ஆம் தேதி வளைகாப்பு உற்சவம்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:37:22 AM (IST)
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சைவத் தலங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவிலில், இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் பக்திப் பெருக்குடன் தொடங்கியுள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆடிப்பூரம், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டுத் திருவனந்தல் வழிபாடு, கோபூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்கக் கொடிப்பட்டம் கோவிலுக்குள் வீதி உலாவாக எடுத்து வரப்பட்டு, காந்திமதி அம்பாள் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் முறைப்படி கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டுத் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த ஆன்மீக நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காந்திமதி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) நான்காம் திருநாளில் மதியம் காந்திமதி அம்பாளுக்குப் பாரம்பரிய வளைகாப்பு உற்சவமும், ஜூலை 18 அன்று மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமாவளவன் குறித்த நோபல் பரிசு கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்: வைகோ பேட்டி!
வெள்ளி 10, ஜூலை 2026 8:49:57 AM (IST)

நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

ரெட்டியார்பட்டி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வியாழன் 9, ஜூலை 2026 11:38:46 AM (IST)

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 10:40:43 AM (IST)

திருவேங்கடம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 3:55:45 PM (IST)

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் பெண் உட்பட 11 பேர் கைது: 2பேருக்கு கை முறிவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:20:29 AM (IST)


