» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில், இரத்த வங்கி சார்பில் உலக இரத்த கொடையாளர்கள் தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் இரத்த மையங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட தன்னார்வ இரத்தக் கொடையாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில்: "பாதுகாப்பான மற்றும் போதுமான இரத்த தானத்தின் அவசியத்தைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னார்வ இரத்தக் கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் உலக இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது.
இரத்த தானம் என்பது உயிரைக் காக்கும் உயரிய மனிதநேயப் பணியாகும். ஒரு யூனிட் இரத்தம் மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றும் திறன் கொண்டது. விபத்துகள், அறுவை சிகிச்சைகள், பிரசவ கால அவசரநிலைகள், புற்றுநோய் மற்றும் இரத்த நோய்களுக்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தன்னார்வக் கொடையாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.
எனவே, இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து இரத்த தானம் செய்து உயிர்களைக் காக்கும் பணியில் பங்கேற்க வேண்டும்." என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தன்னார்வ இரத்த தானத்தின் அவசியம் குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். "இரத்த தானம் செய்வோம்... உயிர்களைக் காப்போம்", "உங்கள் இரத்தம் – ஒருவரின் புதிய வாழ்வு" ஆகிய விழிப்புணர்வு முழக்கங்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலசுப்பிரமணியம், இரத்த வங்கித் துறைத் தலைவர் மருத்துவர் ரவிசங்கர், மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், இரத்த வங்கி அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)

திருமணமான 5 மாதங்களில் கொடூரம்: புதுப்பெண் வெட்டிக்கொலை - கணவர் நீதிமன்றத்தில் சரண்!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:28:34 AM (IST)

அரசு பள்ளியில் பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயம்: ஆசிரியை மீது வழக்குப்பதிவு
செவ்வாய் 28, ஜூலை 2026 7:48:07 AM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு!
திங்கள் 27, ஜூலை 2026 5:34:27 PM (IST)

சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித் தபசுத் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்!
திங்கள் 27, ஜூலை 2026 8:01:44 AM (IST)


