» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாரம் 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 7:46:41 AM (IST)

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நேரத்தை உடனடியாக அமல்படுத்தி அறிவிக்கக் கோரி, அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பின் (UFBU) சார்பில் தூத்துக்குடியில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி பீச் ரோடில் உள்ள 381 வங்கி வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, UFBU தூத்துக்குடி வங்கி தொழிற்சங்க நிர்வாகி திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி செந்தில்குமரன் வரவேற்புரையாற்றினார்.
இப்போராட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொழிற்சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், துரைராஜ், மைக்கேல் ஞானராஜ் மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கி தொழிற்சங்க நிர்வாகி சன்னாசி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினர்.
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, வாரத்தில் 5 நாட்கள் பணியை உடனடியாக அரசு மற்றும் வங்கி நிர்வாகம் பிரகடனப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:22:47 PM (IST)



உழைக்கும் கோமாளிAug 13, 2026 - 09:33:31 AM | Posted IP 172.7*****