» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)
நெல்லை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசாரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ரவுடியைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை அருகே தாழையூத்து - மதுரை சாலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான அரிசி ஆலை அருகில் நேற்று மதியம் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நபர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்களைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் இசக்கிமுத்து என்ற ராஜா (34) நாட்டுத் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை எச்சரித்து பிடிக்க முயன்றபோது, "தன்னைக் கைது செய்ய வந்தால் சுட்டுக் கொன்று விடுவேன்" என்று துப்பாக்கியைக் காட்டி போலீசாருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இருப்பினும், சாதுரியமாகவும் மின்னல் வேகத்திலும் செயல்பட்ட போலீசார் அவரைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 1 நாட்டுத் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களைப் பறிமுதல் செய்த தாழையூத்து காவல் நிலையப் போலீசார், வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர். கைதான இசக்கிமுத்து காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:22:47 PM (IST)


