» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சாலை விரிவாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 11:49:23 AM (IST)
நெல்லை - திருச்செந்தூர் நெடுஞ்சாலை விரிவாக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் விபி ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் தைப்பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலை வேலை நடைபெறுவதால் பல சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, பல பக்தர்களின் கால்களில் காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
தைப்பூச திருவிழாவிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் சாலை விரிவாக்க பணிகள் பெரும்பாலான இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளையும் துரிதமாக முடித்து திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சிரமம் இன்றி சென்றுவர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)
